சந்தர்ப்ப சூழ்நிலையில் நடைபெறும் நிகழ்வுகளை பிரதிபலிக்கும் “சம்பவம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் சம்பவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்க விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் திருமலை, மகேந்திரகுமார் நாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உயிருக்கு போராடும் தனது மகளை காப்பாற்ற துடிக்கும் ஒரு தந்தையும், இந்த சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சாதாரண மனிதனும் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் போது நடைபெறும் சம்பவமே கதையின் மையக்கரு.

இதில் ஸ்ரீகாந்த், நட்டி ஆகிய இருவரும் கதா நாயகர்களாக நடிக்க, கதை நாயகிகளாக பூர்ணா, ஸ்வேதா அவஸ்தி நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தரா டிராவல்ஸ் படத்தின் நாயகி ராதா நடிக்கிறார். மேலும் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், ஜெயபிரகாஷ், கே.ராஜன், மகேந்திரகுமார் நாகர், சிங்கம்புலி, நாஞ்சில் சம்பத், விஜய் டிவி முல்லை மற்றும் பல நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் பா.ரஞ்சித்குமார், இவர் இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். மைனா, சாட்டை, மொசக்குட்டி, சௌகார்பேட்டை, பொட்டு, கா ஆகிய படங்களை தொடர்ந்து பிரம்மாண்டமான பொருள் செலவில் தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் இப்படத்தை தயாரிக்கிறார்.

Exit mobile version