ஆதரவற்றோர் இல்லத்தில் நடைபெற்ற “ஆனந்த தீபாவளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிருத்திகா உதயநிதி

“உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்ற நிகழ்வை நடத்தி வருகின்றனர். “ஆனந்த தீபாவளி”யின் 25வது வருடமான இந்த ஆண்டில் பல குழந்தைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இன்று நடந்த இந்நிகழ்வில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி, வாணி போஜன், தான்யா ரவிச்சந்திரன், அஷ்வின் கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர். நிகழ்வில் பிரபலங்கள் குழந்தைகளுடன் கொண்டாடிய தீபாவளி அற்புதமான நிகழ்வு என்று கூறி  “உதவும் உள்ளங்கள்” அமைப்பிற்கு  தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

Exit mobile version