“இடியட்”படம் பார்பவர்களா.!? படம் எடுத்தவர்களா.!?

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு , தில்லுக்கு துட்டு-2 ஆகிய படங்களை இயக்கிய ராம் பாலா இயக்கத்தில் வெளிவந்துள்ளது “இடியட்” திரைப்படம். இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா,நிக்கி கல்ராணி, ஆனந்த ராஜ், ஊர்வசி, மயில்சாமி, ரவி மரியா,சிங்கமுத்து ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்குனர் ராம் பாலா ஏற்கனவே இயக்கிய தில்லுக்கு துட்டு பாணியிலேயே இந்தப் படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார்.படத்தில் ஆனந்த ராஜ், ஊர்வசி ஆகிய இருவரின் நடிப்பு சிறப்பு. படத்தில் சில இடங்களில் வசனங்கள் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது. படத்தின் முதல்பாதி ஓரளவு நகைச்சுவையுடன் கலகலப்பாக போகிறது. இடைவேளைக்குப் பிறகு கதையின் போக்கில் அளவுக்கு மீறி சொதப்பி இருக்கிறார் இயக்குனர் ராம் பாலா. இடைவேளைக்குப் பிறகு கதாநாயகன் சிவாவுக்கு பதில் நகைச்சுவை என்கிற பெயரில் ரவி மரியாவுக்கு அதிகமான முக்கியத்துவம் வழங்கியிருக்கிறார் ராம் பாலா. ஆனால் நகைச்சுவை சீனில் சிரிப்பு வரவில்லை. மயில்சாமி நடித்திருந்தாலும் வழக்கமாக அவர் மீது உள்ள எதிர்பார்ப்பு ஏமாற்றமே.

நடன இயக்குனர் சிவசங்கர் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால் அவர் ஏற்று நடித்த பேய் கதாப்பாத்திரம் பெரிய அளவில் இல்லை. படத்தில் பேய்கள் நிறைய வந்து போகின்றன. ஆனால் பேய் படம் பார்த்த உணர்வோ,பயமோ ஏற்படவில்லை. இந்த படத்திற்கு “இடியட்” என்று பெயர் வைத்ததற் கான காரணத்தை இயக்குனர் ராம் பாலா கடைசிவரை விளக்கவில்லை. ராம் பாலாவின் “இடியட்” படம் பார்ப்பவர்களா..! ? எடுத்தவர்களா…! ? மொத்தத்தில் சொதப்பலோ சொதப்பல் படமாகத் தான் இருக்கிறது.

Exit mobile version