“இறுதி முயற்சி” படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு !

வரம் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள “இறுதி முயற்சி”  திரைப்படத்தினை இயக்குனர் பார்த்திபனின் உதவியாளர் வெங்கட் ஜனா எழுதி இயக்கி உள்ளார்.

இறுதி முயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் மனநலம் குன்றிய சிறுவர்கள் பள்ளிக்கூடத்திற்குச் சென்று, அங்கு படிக்கும் சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி, அவர்களை சந்தோஷ படுத்தியதோடு, சிறுவர்களின் அன்பையும், ஆசியையும் பெற்று வந்துள்ளனர்

இந்த இறுதி முயற்சி திரைப்படம் சாதாரண பெட்டி கடை வைத்திருப்பவர் முதல், பல கோடிகளில் வணிகம் செய்யும் பெரும் தொழில் அதிபர்கள் வரை சந்திக்கும் ஒரு பிரச்சினையை மையப்படுத்தி, நெஞ்சைப் பதை பதைக்க வைக்கும் வகையில், சஸ்பென்ஸ், த்ரில்லர் ஜானரில் திரைக்கதை அமைத்து அனைத்து தரப்பு மக்களும் குடும்பத்தினருடன் ரசித்து பார்க்கும் விதமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இறுதி முயற்சி திரைப்படம் உருவாகியுள்ளதாம்.

ரஞ்சித், மெகாலி மீனாட்சி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, விட்டல் ராவ் கதிரவன் புதுப்பேட்டை சுரேஷ் இன்னும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளார்.

இறுதி முயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற‌ நிலையில், இறுதி கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் வெளியீடு பற்றிய அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version