ஞானவேல்ராஜா மீது மோசடி வழக்கு

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது , நடிகர் சிவகார்த்திகேயன் நான்கு கோடி சம்பள பாக்கி இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருப்பது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயன் சம்பளம் மற்றும் பணத்திற்காக நீதிமன்றம் செல்கிற ஆள் கிடையாது. இருந்தாலும் ஞானவேல்ராஜா மீது வழக்கு போடுகிற அளவுக்கு வந்ததற்கு காரணம், வேலைக்காரன் படத்தின் போது ஏற்பட்ட பிரச்சினை தான் காரணம்.

வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் போது, என்னிடம் வாங்கிய பத்து லட்ச ரூபாய்க்கு படம் நடித்துக் கொடுத்த பிறகு தான் வேலைக்காரன் எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். அதன்பிறகு மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துக் கொடுத்த பிறகுதான் ஞானவேல்ராஜா அமைதி ஆனார். அந்த படத்திற்கான சம்பளத்தை ஞானவேல்ராஜா கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் தான், நீதிமன்றத்தை நாடியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். ஏற்கனவே ஞானவேல்ராஜா இது போன்ற வழக்குகளில் நீதிமன்றம் சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version