நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டு குறித்து கருத்து சொல்ல முடியாது ! நடிகை ஆண்ட்ரியா

சென்னை திருவான்மியூர், வால்மீகி நகரில் பெண்களுக்கான உள்ளாடை உலகம் ஷீக் ரேட்ஸ் (Shecratas) கடை திறப்பு விழா நடைபெற்றது. நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைத்தார். இந்தக் கடை பெண்களுக்கான அனைத்து விதமான பிராண்டுகளின் உள்ளாடைகளும் கிடைக்கும் அளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

கடையைத் திறந்து வைத்து ஆண்ட்ரியா பேசும்போது, நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் ஒரு பெண்ணாக மகிழ்ச்சி அடைகிறேன். இதை வடிவமைத்திருப்பது ஒரு ஆண் என்பதில் மகிழ்ச்சி. இது மாறிவரும் இந்த உலகத்தில் அனைவருக்கும் தேவையான ஒன்று. இது நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தேவைப்படும் ஒன்று. இது பெண்களுக்கானது மட்டுமல்ல அனைவருக்குமானது. ஆண்கள் தங்கள் உறவினர்களுக்கு, பெண் நண்பர்களுக்கு இதை பரிந்துரைக்கலாம் என்றார்.

ஹேமா கமிஷன் பற்றியும், பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்தும் கருத்து சொல்வதைத்  தவிர்த்துவிட்டார். எப்போதும் தைரியமாக கருத்துக்களை வெளியிடும் ஆண்ட்ரியா, நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து சொல்லாமல் தவிர்த்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கடைத் திறப்பு விழாவினை ஒட்டி ஏராளமான பிரமுகர்கள் இதன் நிறுவனர் ஹனீபுக்கும் புதிய நிறுவனத்திற்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button