மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்திற்கு “மொத ராத்திரி” என பெயரிட்டுள்ளனர் !

இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ். ‘புஷ்பா’, ‘குட் பேட் அக்லி’ போன்ற பிளாக்பஸ்டர் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. திரைத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம் அடுத்ததாக தனது கிரியேட்டிவ் ஸ்பெக்ட்ரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

இந்நிறுவனம் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படமான புரொடக்‌ஷன் நம்பர் 3 தற்போது ‘மொத ராத்திரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமான இதன் முதல் பார்வை மற்றும் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (மே 1, 2026) மாலை அவரது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார். ராஜா கருப்பசாமி இயக்கும் இந்தப் படத்தில் ரிஷிகாந்துடன் ‘சிறை’ மற்றும் ‘யூத்’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அனிஷ்மா அனில்குமார் நடிக்கிறார்.

வழக்கத்திற்கு மாறான ஒரு திருமணம், ஒரு இரவு, இரண்டு அறிமுகமில்லா நபர்கள், ஆச்சரியங்கள், பல பொய்கள் என ஓர் இரவு எல்லாவற்றையும் மாற்றுகிறது என்பதுதான் ‘மொத ராத்திரி’.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி பகிர்ந்து கொண்டதாவது, பிரம்மாண்டமான எண்டர்டெயின்மெண்ட் கதைகளை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் அதே சமயம், அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையிலான வலுவான கதைகளையும் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறோம். திறமையான புதியவர்களுக்கு எங்கள் நிறுவனத்தில் எப்போதும் வாய்ப்பு உண்டு. ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் கதையை இயக்குநர் ராஜா கருப்பசாமி சொன்னபோதே இதுபோன்ற தனித்துவமான என்கேஜிங் கதைகளை பெரிய திரையில் கொண்டு வர வேண்டும் என முடிவு செய்தோம். இளம் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் இணைந்து பணியாற்றுவது உற்சாகமாக உள்ளது. இதுபோன்ற உற்சாக அனுபவம் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கும் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.

இயக்குநர் ராஜா கருப்பசாமி பகிர்ந்து கொண்டதாவது, மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற பெரிய நிறுவனத்தில் இயக்குநராக அறிமுகமாவது எனக்கு ஸ்பெஷலான ஒன்று. புது ஐடியா மற்றும் திறமையானவர்கள் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை எனக்கு பொறுப்பு, மகிழ்ச்சியை ஒருசேர கொடுத்தது. படைப்பு சுதந்திரத்துடன் எனக்கு விருப்பமான தொழில்நுட்பக் குழுவினருடன் பணிபுரிய அனுமதித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. உணர்வுப்பூர்வமான, அதே சமயம் என்கேஜிங்கான திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு ‘மொத ராத்திரி’ திரைப்படம் நிச்சயம் தரும். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவி சங்கர் இருவருக்கும் நன்றி என்றார்.

என்கேஜிங்கான கதை, புது திறமையாளர்கள் மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனம் என ‘மொத ராத்திரி’ திரைப்படம் புதுமையான அதேசமயம் எண்டர்டெயின்மெண்ட் கதைக்களத்தை ரசிகர்களுக்கு தர இருக்கிறது. படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button