நடிகை மீராமிதுன் மீது காவல்நிலையத்தில் புகார்

நடிகை மீராமிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி மைலாப்பூர் காவல்நிலையத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அலுவலக செயலாளர் முரளி புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது
நடிகை மீராமிதுன் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களை இழிவுபடுத்தும் வகையில் கேவலமாக பேசியுள்ளார். அந்த சாதியினருக்கு நடக்கின்ற கொடுமைகளுக்கு அவர்களின் நடத்தைகள் தான் காரணம் பேசியிருக்கிறார். மேலும் பட்டியல் சாதியைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர்களை குறிப்பிட்டு இழிவுபடுத்திப் பேசி இருக்கிறார்.

நடிகை மீராமிதுன் இவ்வாறு பேசியிருப்பது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை திருத்தச் சட்டப்படி வன்கொடுமை ஆகும். ஆகையால் பொது வெளியில் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களை இழிவுபடுத்திப் பேசிய நடிகை மீராமிதுன் மீது வன்கொடுமை

நடிகை மீராமிதுன் ஏற்கனவே அவ்வப்போது தனது சர்ச்சைப் பேச்சுக்களால் சினிமாத்துறையினரின் கண்டனத்திற்குள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.