சர்வதேச விளையாட்டு வீரர் “ரிவான்” அமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து !

கார்டிங் ரேஸ் போட்டிகளில் இந்திய அளவிலான போட்டிகளில் சாதனை படைத்தவரும், பஹ்ரைனில் உள்ள சாகிர் இன்டர்நேஷனல் எஃப்1 சர்க்யூட்டில் நடைபெறும் உலக கார்டிங் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்ளவுள்ள விளையாட்டு வீரர், மரியாதை நிமித்தமாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

ஏழு முறை தேசிய சாம்பியனான ப்ரீதம் தேவ் மோசஸின் மகன் ரிவான் தேவ் ப்ரீதம் 2022 ஆம் ஆண்டு FMCSI தேசிய கார்டிங் சாம்பியன்ஷிப்பில் ஒரு புதிய வீரராக கார்டிங்கைத் தொடங்கினார். 2023 ஆம் ஆண்டில், பெங்களூர் கார்டோபியா சர்க்யூட்டில் நடைபெற்ற மூன்று சுற்று சாம்பியன்ஷிப் போட்டியான மெக்கோ மெரிட்டஸ் கோப்பை போட்டியில் 10 வயது சிறுவனான ரிவான் கலந்துகொண்டார்.

ரிவான் ஆறு பந்தயங்களில் மூன்றில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். பிறகு சமீபத்தில் முடிவடைந்த MECO-FMSCI தேசிய கார்டிங் சாம்பியன்ஷிப் 2023 இல் ரிவான் பங்கேற்றார். இது இந்தியா முழுவதும் உள்ள பங்கேற்பாளர்களுக்காக நடத்தப்படும் ஐந்து சுற்று தேசிய சாம்பியன்ஷிப் ஆகும். மைக்ரோ மேக்ஸ் எனப்படும் 13 வயதுக்குட்பட்ட பிரிவில் 16 பேர் கலந்துகொண்டனர். ரிவான் 10 பந்தயங்களில் மூன்றில் வென்றார் . கடந்த அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்ற கடைசி பந்தயத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார், மேலும் 2023ஆம் ஆண்டுக்கான தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

தேசிய கார்டிங் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இதைச் சாதித்த இளம் வயதினரில் ரிவான் ஒருவர். இந்தியாவில் நம்பர்-1 ஆனதற்கான ஒரு பெரிய பரிசாக, ரிவான் இந்த டிசம்பரில் பஹ்ரைனில் உள்ள சாகிர் இன்டர்நேஷனல் எஃப்1 சர்க்யூட்டில் நடைபெறும் உலக கார்டிங் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஃபார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப்பில் பந்தயத்தில் பங்கேற்பதே ரிவானின் இலக்கு..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button