“நெவர் எஸ்கேப்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

ராயல் பி புரொடக்சன்ஸ் சார்பில் நான்சி ஃப்ளோரா தயாரிப்பில், இயக்குநர் டிஶ்ரீ அரவிந்த் தேவ் ராஜ் இயக்கத்தில், புதுமுக  நட்சத்திரங்கள் நடிப்பில், அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக உருவாகி வரும் திரைப்படம் “நெவர் எஸ்கேப்”. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில், தயாரிப்பாளர் ஆல்பர்ட் பேசியதாவது, சினிமாவிற்கு இப்போது தான் அறிமுகமாகியுள்ளேன். இந்தப்படம் ஆரம்பித்த போது மொத்த டீமுக்கும் 25 வயது கூட நிரம்பவில்லை, ஆனால் 50 வயது ஆனவர்களுக்கு இருக்கும் அனுபவம் அவர்களிடம் இருக்கிறது. இவர்கள் சொன்ன கதையே படு வித்தியாசமாக இருந்தது. இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் எல்லோரும் நண்பர்கள். படத்தை வித்தியாசமாக தந்துள்ளார்கள். ராபர்ட் மாஸ்டர் அருமையான நடிப்பைத் தந்துள்ளார். இப்படம் ஹாரர், சைக்கோ, மிஸ்டரி மூன்றும் கலந்து வித்தியாசமான அனுபவமாக இருக்கும். இப்படத்திற்காக புதுமையான ஒரு விசயத்தை செய்துள்ளோம். படத்தை திரையரங்கில் பார்ப்பவர்கள், எங்களின் 10 கேள்விகளுக்குப் பதிலளித்தால், பதிலளித்தவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து, வெற்றி பெறுபவருக்கு 1 லட்சம் பரிசு தரவுள்ளோம். என்பதை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

சிறுபட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்புச்செழியன்  பேசியதாவது, படத்தின் தலைப்பிலேயே கவர்ந்து விட்டார்கள். நெவர் எஸ்கேப். தவறு செய்தால் அவர்கள்  நெவர்  எஸ்கேப்  அது தான் கதை என்றார் தயாரிப்பாளர். சுவாரஸ்யமான கதையை தந்துள்ளார்கள். தயாரிப்பாளர் சொன்ன 1 லட்சம் பரிசு, நல்ல ஐடியா, அதை நாங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் செய்வதாக இருந்தோம், ஆனால் இவர் முந்திக்கொண்டார். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் குமார் பேசியதாவது, யூடுயூப் வீடியோவிலிருந்து நிறைய பேர் சினிமாவிற்கு வந்துள்ளார்கள் ஆனால் ஒரு டெக்னீஷீயன் என்ற வகையில் நான் தான் முதல் ஆள். மிக மகிழ்ச்சியாக உள்ளது. இனி. வீட்டில் என்னை நம்புவார்கள். யூடுயூபிலிருந்து வரும் போது நிறைய தயக்கம் இருந்தது. ஏனென்றால் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, நிறைய அனுபவம் தேவை. நாங்கள் அனைவரும் நண்பர்கள். அதனால் தயக்கம் இல்லாமல் வேலை செய்ய முடிந்தது. அனைவரும் ஒன்றாக இணைந்து படத்திற்காக உழைத்திருக்கிறோம். ராபர்ட் மாஸ்டரை வைத்து ஒரு பாடல் எடுத்தோம் நல்ல அனுபவம் என்றார்.

நாயகன் பிரித்வி பேசியதாவது…
நாஞ்சில் நளினியின் பேரன் நான். என்னுடைய முதல் படம் கம்பெனி. அந்தப்படத்தில் நடித்ததைப் பார்த்து, இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த ஆல்பர்டுக்கும், இயக்குநருக்கும் நன்றி. மிக மகிழ்ச்சியோடு வேலைபார்த்த படம் மிக நன்றாக வந்துள்ளது. ராபர்ட் மாஸ்டர் நிறைய சொல்லித்தந்தார். படத்தின் இயக்குநர் திறமையானவர், மிக சூப்பரான திரைக்கதை, கண்டிப்பாக உங்களுக்கு படம் பிடிக்கும் என்றார்.

இயக்குநர் அரவிந்த் ராஜ் பேசியதாவது, இது தான் என் முதல் மேடை.  தயாரிப்பாளருக்கு என் முதல் நன்றி. இந்தப்படத்திற்காக நிறைய தயாரிப்பாளர்களை அணுகினோம். இறுதியில் ஆல்பர்ட் கதை கேட்டவுடனே ஒத்துக்கொண்டார். இப்படம் ஒரு வித்தியாசமான ஹாரர் திரில்லர், ஹாரரில் காமெடி, மிஸ்டரி என நிறைய கதைகள் வருகிறது ஆனால் இந்தப்படம் வித்தியாசமாக இருக்கும். கதையில் நிறைய திருப்பங்கள் இருக்கிறது மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும். இப்படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் எல்லோரும் என் நண்பர்கள், படத்தில் ஒன்றாக இணைந்து உழைத்துள்ளோம். ராபர்ட் மாஸ்டர் மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்துள்ளார். மிக நல்ல வேடம் செய்துள்ளார் என்றார்.

நடிகர், நடன இயக்குநர் ராபர்ட் பேசியதாவது, இப்படத்தின் கதை சொன்ன போது, யார் டைரக்டர் என்று கேட்டேன், அரவிந்தைப் பார்த்தால் இயக்குநர் என்றே நம்பமுடியவில்லை. மூச்சு விடாமல் கதை சொன்னார். கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மொட்டை அடிக்க வேண்டும் என்றார்கள் தாடி எடுக்க வேண்டும் என்றார்கள் நான் வேறு ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தேன், அவர்களிடம் பர்மிசன் வாங்கி இப்படத்தில் நடித்தேன். அதற்குக் காரணம் இவர்கள் மீதுள்ள அன்பு தான். நல்ல டீம் கடுமையாக உழைத்துள்ளனர். இப்படத்தில் என்னை வித்தியாசமாக பார்ப்பீர்கள், படம் நன்றாக வந்துள்ளது என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button